ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வாலி படத்தின் மூலம் வெற்றிப்பட இயக்குநராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து வெற்றிப்படங்களை இயக்கிய அவர் ஒரு கட்டத்தில் நியூ படத்தின் மூலம் ஹீரோவானார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வேறு சில படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். அவற்றில் பல படங்கள் தோல்வியடைந்ததினால் எஸ்.ஜே.சூர்யாவின் கேரியரில் மிகப்பெரிய தேக்கம் நிலவியது. பெரும்போராட்டத்துக்குப் பிறகு அதிலிருந்து மீண்டு, இசை என்ற படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்தார். படம் ரெடியாகி பல மாதங்களான பிறகும் இசை இன்னும் வெளியாகவில்லை.
காரணம்...இசை படத்தின் சர்ச்சைக்குரிய கதை. ஏ.ஆர்.ரகுமானின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் இளையராஜா என்னவெல்லாம் செய்தார் என்பதை சொல்லும் வகையில் இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறாரார் எஸ்.ஜே.சூர்யா. இந்தப் படத்தை வாங்கினால் இளையராஜாவின் கோபத்துக்கு ஆளாக வேண்டி வருமோ என்ற அச்சத்திலேயே இசை படத்தை வாங்கி வெளியிட யோசிக்கிறார்களாம். பெரும் தொகையை கடனாக வாங்கி இசை படத்தை தயாரித்த எஸ்.ஜே.சூர்யா என்ன செய்வது என்று தெரியாமல் முழிபிதுங்கிப்போயிருக்கிறாராம்.