தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வெங்கட்பிரபு உடன் சூர்யா இணையும் புதிய படத்தின் பூஜை, தமிழ் புத்தாண்டில் சிறப்பாக நடந்தது. சென்னை-28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி படங்களுக்கு பிறகு வெங்கட்பிரபு, அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தின் நாயகனாக சூர்யா நடிக்கிறார். சூர்யாவின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். மதன் கார்கி பாடல் வரிகள் எழுதுகிறார், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை இன்று(ஏப்ரல் 14ம் தேதி) தமிழ்புத்தாண்டு நன்நாளில் துவங்கியது. இதில் நடிகர் சூர்யா, அவரது அப்பா சிவக்குமார், இயக்குநர் பாலா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, கங்கை அமரன், பிரேம்ஜி அமரன், வெங்கட்பிரபு, ஸ்டண்ட் இயக்குநர் சில்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தற்போது சூர்யா, 'அஞ்சான்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இதனை முடித்த பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். தற்போது படத்தில் ஹீரோயினாக நடிக்க முன்னணி நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது.