பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அரசியல்கட்சிகளுக்கு நடிகர் நடிகைகள் பணம் வாங்கிக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சமூக சிந்தனையோடு வாக்காளர்களிடம் தேர்தல் வழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் மாநகராட்சி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நடிகர் ஜெயம்ரவி கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தையும், கண்காட்சியையும் துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வாக்களிப்பது நமது கடமை. ஒவ்வொரு முறையும் நாம் வாக்களிக்கும்போதும் நமது ஜனநாயக கடைமையை நிறைவேற்றுகிறோம் என்று பெருமை பட்டுக் கொள்ள வேண்டும். வாக்களிப்பது நமது உரிமை. அந்த உரிமையை பணத்துக்காக யாரிடமும் விட்டுத் தரக்கூடாது. நல்வர்களை கண்டுகொண்டு நமது மனசாட்சிப்படி அவர்களை தேர்வு செய்ய வேண்டும். இதை நடிகர் என்ற முறையில் அல்ல. நானும் ஒரு வாக்களாள், இந்த நாட்டின் குடிமகன் என்ற உரிமையில் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயம்ரவி.