தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தயாரிப்பார் சங்கத்ததில் தற்போது பொறுப்பு வகிக்கும் கேயார் தலைமையிலான நிர்வாகிகள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முன்னாள் பொருளாளர் கலைப்புலி தாணு முயற்சித்தார் பொதுக்குழுவை கூட்ட நிர்வாகிகள் மறுத்ததால் தாணு உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் வருகிற மே11ந் தேதிக்குள் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று தீர்ப்பு கூறியது.
இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் டி.சிவா, ஞானவேல்ராஜா ஆகியோர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இது நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், எம்.வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
"மே 11ந் தேதிக்குள் பொதுக்குழுவை கூட்டவேண்டும். அதில் உறுப்பினர்கள் யாரேனும் நம்பிக்கை இல்லா தீர்மான கோரிக்கை வைத்தால் அதை பரிசீலித்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும். ரகசிய வாக்கெடுப்பின் மூலம் அதை நடத்தி முடிவை அறிவிக்க வேண்டும். பார்வையாளராக நீதிபதி பி.சண்முகம் நியமிக்கப்படுகிறார். தேவையான போலீஸ் பாதுகாப்பை கேட்டுப்பெறலாம். கூட்ட நிகழ்வுகளை நீதிமன்றத்தில் பார்வையாளர் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.