'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் அவரது 55வது படம் தொடங்கப்பட்டு விட்டபோதும், இன்னும் படத்தில் பங்குபெறும் நடிகர்-நடிகைகளைப் பற்றிய முழு விவரங்களையும் வெளியிடவில்லை. அதேபோல், படத்தின் டைட்டிலை அறிவிக்காத போதும், வாரணம் ஆயிரம் பாணியில் ஆயிரம் தோட்டாக்கள் என்று வைக்க அவர்கள் முடிவு செய்திருப்பதாக அந்த யூனிட்வாசிகள் கிசுகிசுக்கிறார்கள்.
மேலும், இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் அஜீத், ஒரு வேடத்தில் போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறாராம். அதனால் தற்போது தலைமுடியை குறைத்து போலீஸ் கட்டிங் வைத்து நடித்து வரும் அவர், தனது கையில் ஒரு காப்பு அணிந்துள்ளார். சாதாரணமாக கெளதம்மேனன் இயக்கும் எல்லா படங்களிலுமே இந்த மாதிரி ஒரு காப்பை அவரது ஹீரோக்கள் அணிந்திருப்பது வழக்கம்.
அதனால் அஜீத்துக்கும் ஒரு செண்டிமென்டிற்காக மாட்டி விட்டிருக்கிறார். மேலும், இப்படத்தை அதிக நாட்கள் இழுக்காமல் வேகமாக முடித்து விட திட்டமிடப்பட்டிருப்பதால், முதல் நாளில் இருந்தே ஒவ்வொரு ஷாட்டையும் உடனுக்குடன் ஓ.கே பண்ணிக்கொண்டிருக்கும் அஜீத், முந்தைய படங்களை விடஇந்த படத்தில் கூடுதல் வேகம் காட்டுகிறார்.