புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
இந்தி நடிகை கரீனா கபூர், சூர்யாவுடன் ஒரு பாட்டில் ஆடப்போவதாக செய்திகள் வந்துள்ள நிலையில், சூர்யா யார் என்றே எனக்கு தெரியாது என கூறியுள்ளார் நடிகை கரீனா கபூர். சமீபகாலமாக இந்தி நடிகைகளின் பார்வை தென்னிந்திய சினிமா பக்கம் திரும்பியுள்ளது. படங்களில் நடிக்க ஆர்வம் இல்லை என்றாலும் ஒரு பாட்டுக்கு ஆடி, கோடியில் சம்பாதித்து விட்டு செல்கின்றனர். அந்தவகையில் இந்தி நடிகைகள் மல்லிகா ஷெராவத், ஜரின் கான், சித்திரங்கடா, சன்னி லியோன் ஆகியோரைத் தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கரீனா கபூரும், சூர்யாவுடன் தமிழில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடப்போவதாக செய்திகள் வந்தன.
இதுப்பற்றி தகவல் அறிந்த கரீனா, தான் சூர்யாவுடன் குத்தாட்டம் போடவில்லை என்று மறுப்பு தெரிவித்ததோடு, சூர்யா யாரென்றே எனக்கு தெரியாது என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், அஞ்சான் படத்தில் நான் சூர்யாவுடன் ஆடவில்லை. சொல்லப்போனால் சூர்யா யாரென்றே எனக்கு தெரியாது. மொழி தெரியாத படங்களில் எனக்கு நடிக்க விருப்பம் இல்லை. அது கோலிவுட் ஆகட்டும், இல்லை ஹாலிவுட் ஆகட்டும், பிற மொழிப்படங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.
இதனிடையே கரீனா கபூர் தற்போது, சூர்யா நடித்த சிங்கம்-2 படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடித்து வருகிறார். அப்படி இருக்க அவர், சூர்யா யாரென்றே தெரியாது என கூறியிருப்பது சூர்யா ரசிகர்கள் இடையே கோபத்தை உண்டாக்கியுள்ளதாம். இதனையடுத்து கரீனா மீண்டும் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் நான் சூர்யாவை காயப்படுத்த அப்படி பேசவில்லை, சூர்யாவை யாரென்று தெரியாது என கூறவில்லை, அவரை நான் பார்த்தது இல்லை என்று தான் கூறினேன், நான் கூறியதை தவறாக செய்தி வெளியிட்டு விட்டனர் என மழுப்பியுள்ளார்.