டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் அஞ்சாதே, கோ உள்பட பல படங்களில் நடித்தவர் அஜ்மல். இதில் கே.வி.ஆனந்த் இயக்கிய கோ படத்தில் ஜீவா கதாநாயகனாக இருந்தபோதும், அஜ்மலே முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதனால் அந்த படத்திற்கு பிறகு தமிழில் அவர் அடுத்த லெவலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அதன்பிறகு அவர் நடித்த கருப்பம்பட்டி வெற்றியாக அமையவில்லை.
இருப்பினும் வெற்றிச்செல்வன், கதிர்வேல், உலா உள்பட சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் வெற்றிச்செல்வன் படத்தில் அஜ்மல்-ராதிகா ஆப்தே இருவரும் ஜோடி சேர்ந்து நடித்து வந்தனர். ஆனால் எப்போதோ வெளிவருவதாக இருந்த அப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. என்ன காரணம்? என்று விசாரித்தால், அப்படம் ஒரு பிரச்னையில் சிக்கியிருப்பதாக சொல்கிறார்கள்.
அப்படி என்னதான் பிரச்னை? என்று துருவிப்பார்த்தால், ஒருநாள் அஜ்மல், ராதிகா ஆப்தே சம்பந்தப்பட்ட ஒரு கிளுகிளுப்பு காட்சி படமாக்கப்பட்டதாம். அப்போது உணர்ச்சிவசப்பட்ட அஜ்மல் கொஞ்சம் ஓவராகி, ராதிகா ஆப்தேவிடம் சில்மிஷம் செய்துவிட்டாராம். இதனால் டென்சனான ராதிகா ஆப்தே, ஆங்கிலத்தில் அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே ஸ்பாட்டை விட்டு வெளியேறி விட்டாராம் .
அதையடுத்து, இப்போதுவரை படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுக்கிறாராம். அஜ்மலுடன் நான் நடிக்க மாட்டேன் என்கிறாராம். ஆனால், அவர்கள் இருவரும் நடிக்க வேண்டிய காட்சிகள் இனனும் நிறையவே உள்ளதாம். அதனால், எப்படி அந்த காட்சிகளை முடிப்பது, எப்போது படத்தை வெளியிடுவது என்று அப்படக்குழுவினர் விழி பிதுங்கி நின்று கொண்டிருக்கிறார்களாம்.