‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சில வருடங்களுக்கு முன் பிரபுதேவாவை கதாநாயகனாக வைத்து களவாடிய பொழுதுகள் என்ற படத்தை இயக்கினார் தங்கர்பச்சான். இந்தப் படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் படநிறுவனம் தயாரித்தது. அப்போது முன்னணி நடிகர்கள், இயக்குநர்களை வைத்து பல படங்களைத் தயாரித்த ஐங்கரன் இண்டர்நேஷனலுக்கு திடீரென பணச்சிக்கல் ஏற்பட, களவாடிய பொழுதுகள் படத்தை கிடப்பில் போட்டது.
தங்கர்பச்சான் தலைகீழாக நின்று பார்த்தார். தங்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனையினால் தற்போது களவாடிய பொழுதுகள் படத்தை முடித்து வெளியிட இயலாது என்று கைவிரித்து விட்டது ஐங்கரன். அதுமட்டுமல்ல, களவாடிய பொழுதுகள் படத்தை முடித்தாலும் அதை ரிலீஸ் செய்ய 2 கோடி செலவு செய்ய வேண்டும். அப்படியே செலவு செய்தாலும் போட்ட பணத்தை அந்தப்படம் வசூலித்துக் கொடுக்க வாய்ப்பில்லை என்றும் சொன்னது.
அதனால் அப்ஸெட்டான தங்கர்பச்சான் ஐங்கரன் நிறுவனத்திடமிருந்து களவாடிய பொழுதுகள் படத்தை தானே அண்டர்டேக் பண்ணி ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தார். அதற்கு ஒப்புக் கொண்ட ஐங்கரன் குறிப்பிட்ட தொகையைச் சொல்லி அந்தத் தொகையைக் கொடுத்தால் படத்தை தருவதாகச் சொன்னது. பணத்தை ஏற்பாடு செய்வதாகச் சொல்லிவிட்டுப்போன தங்கர்பச்சான் இதுவரை வரவே இல்லையாம். இதற்கிடையில் தன் மகனை ஹீரோவாக வைத்து படம் எடுக்கும் வேலையில் இறங்கிவிட்டார்.