ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி பங்குதாரராக உள்ள ஸ்டுடியோக்ரீன் படநிறுவனம் ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரித்தது. கடந்த வருடம் வரை பரபரப்பாக இயங்கிய அந்நிறுவனம் அப்போது வெற்றிப்படம் கொடுத்த இயக்குநர்களுக்கு எல்லாம் வலை விரித்தது. உங்க அடுத்தப்படம் எங்களுக்குத்தான் என்று சொல்லி பெரும்தொகையை அட்வான்ஸாக அவர்களின் கையில் திணித்தது. கார்த்திதான் ஹீரோ..அவருக்கு கதை ரெடி பண்ணுங்க என்று சொல்லி ஆபிஸையும் போட்டுக் கொடுத்து உட்கார வைத்தனர். இப்படி ஸ்டுடியோக்ரீன் படநிறுவனத்திடம் அட்வான்ஸ் வாங்கிய இயக்குநர்களில் மௌனகுரு பட இயக்குநர் சாந்தகுமாரும் ஒருவர்.
கருணாநிதியின் பேரனான அருள்நிதியை வைத்து இவர் இயக்கிய மௌனகுரு வர்த்தகரீதியில் பெரிய வெற்றிபெறவில்லை. என்றாலும் அப்படத்தின் இயக்குநர் சாந்தகுமாருக்கு திறமையான இயக்குநர் என்ற பெயரை வாங்கிக்கொடுத்தது. மௌனகுரு படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் விக்ரம் உட்பட பல முன்னணி ஹீரோக்கள் சாந்தகுமாருக்கு படம் தர முன் வந்தனர். ஆனால் அடுத்தப்படத்தை ஸ்டுடியோக்ரீன் படநிறுவனத்திற்கு இயக்குவதாகச் சொல்லி அட்வான்ஸ் வாங்கிவிட்டதால் தேடி வந்த வாய்ப்புகளை அவரால் ஏற்க முடியவில்லை.
இதற்கிடையில் அழகுராஜா, பிரியாணி என வரிசையாக தோல்விப்படங்களைக் கொடுத்ததால் ஃபீல்ட் அவுட்டாகிவிட்டார் கார்த்தி. அதனால் அவரை வைத்து படம் ஆரம்பிப்பதே ரிஸ்க் என்ற சூழல் நிலவுவதால் சாந்தகுமாரின் படத்தையும் தள்ளி வைத்துவிட்டது ஸ்டுடியோக்ரீன். வாங்கிய அட்வான்ஸ் செலவாகிப்போய், எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டதை எண்ணி நொந்தகுமார் ஆகிவிட்டார் சாந்தகுமார்.