ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பீட்சா படத்தில் விஜயசேதுபதியும், ரம்யா நம்பீசனும் இணைந்து நடித்தனர். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு விஜயசேதுபதியின் மார்க்கெட் கிடுகிடுவென்று உயர்ந்து விட்டது. ஆனால், ரம்யாவின் மார்க்கெட் வழக்கம்போலவே டல்லடித்துக்கொண்டிருக்கிறது. பீட்சாவுக்கு பிறகு விஜயசேதுபதி நடித்து பல படங்கள் வெளியானபோதும், ரம்யாவின் நடிப்பில் இன்னும் ஒரு படம்கூட திரைக்கு வரவில்லை.
இந்நிலையில், விமலுடன் இரண்டாவது படம், வைபவுடன் டமால் டுமீல், நாலும் போலீசும் நல்லா இருந்த ஊரும் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் தற்போது டமால் டுமீல் திரைக்கு வரத்தயாராகி விட்டதால், இந்த படத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் ரம்யா.
அவரிடத்தில் விஜயசேதுபதியுடன் அதன்பிறகு நீங்கள் ஜோடி சேராதது ஏன்? என்று கேட்டதற்கு, தமிழில் நான் நடித்த ஹிட் படம் என்றால் அது விஜயசேதுபதியுடன் நடித்த பீட்சாதான். அதனால் அதன்பிறகும் அவருடன் நான் நடிக்க விரும்பினேன். ஆனால் வாய்ப்புக்கிடைக்கவில்லை. அதே விஜயசேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்தக்தை காணோம், ரம்மி படங்களில் நடித்த காயத்ரி இப்போது மெல்லிசையில் நடித்து வருகிறார். அதேபோல், ரம்மியில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடித்திருக்கிறார்.
ஆனபோதும், எனக்கும் மட்டும் அதன்பிறகு அவருடன் நடிக்க படங்கள் கிடைக்காதது வருத்தமாக உள்ளது என்று சொல்லும் ரம்யா நம்பீசன், இதுபற்றி நான் ஒருமுறை விஜயசேதுபதியை சந்தித்தபோது கேட்டேன். அப்போது, என் படத்தின் கதாநாயகிகளை முடிவு செய்வது டைரக்டர்கள்தான். இருப்பினும் ஒரு டைரக்டர் கதை சொன்னபோது இந்த கதைக்கு ரம்யா பொருத்தமாக இருப்பார் என்று நான் சொன்னபோதுகூட அவர், இல்லை நான் என் மைண்டில் வேறு நடிகையை வைத்திருக்கிறேன் என்று சொல்லி விட்டதாக சொன்னார் விஜயசேதுபதி.
ஆக, நானும், விஜயசேதுபதியும் மீண்டும் இணைந்து நடிக்க இன்னும் நேரம் கைகூடவில்லை என்பதுதான் எனது எண்ணமாக உள்ளது என்று சொல்லும் ரம்யா நம்பீசன், இதையெல்லாம் பார்க்கும்போதுதான் சினிமாவில் திறமையை விட நேரம் ரொம்ப ரொம்ப முக்கியம் என்று நினைக்கத் தோன்றுகிறது என்கிறார்.