‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு விக்ரம் நடித்த ராஜபாட்டை, தாண்டவம், டேவிட் உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெருத்த ஏமாற்றத்தைக்கொடுத்தன. அதனால் அதன்பிறகு கமிட்டான சில படங்களில்கூட நடிப்பதா? வேண்டாமா? என்று அவர் தடுமாறிக்கொண்டிருந்தபோதுதான் ஐ படத்தில் நடிக்க ஷங்கர் அழைத்தார். அதனால், மற்ற வேலைகளை அப்படியே போட்டு விட்டு ஐ பட களத்தில குதித்தார் விக்ரம். ஆனால், இப்போது அப்படத்தை முடித்து விட்டு வெளியே வந்தவருக்கு, அடுத்து என்ன படத்தில் நடிக்கலாம் என்ற குழப்பம் மீண்டும் உருவாகியிருக்கிறது.
ஐ படத்துக்கு பிறகு தனது நண்பர் தரணி இயக்கும் ராஸ்கல் படத்தில் நடிப்பத்தாகத்தான் முதலில் கூறப்பட்டது. ஆனால், அதையடுத்து, பூபதி பாண்டியனின் ராஜா வேஷம் படத்தில் நடிப்பதாக சொன்னார்கள். பின்னர் கோலிசோடா விஜய்மில்டன் இயக்கும் படத்தில் நடிப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த தகவல் எதையும் உறுதிப்படுத்தவில்லை விக்ரம். காரணம், அவரிடம் மேற்படி டைரக்டர்கள் சொன்ன கதை எதுவுமே விக்ரமுக்கு பிடிக்கவில்லையாம்.
இந்த நிலையில, தற்போது இந்தியில் அக்ஷய்குமார் நடித்து வெளியான ஸ்பெஷல் 26 என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம் நடிப்பதாக புதிய செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால் இந்த தகவலை விக்ரம் உறுதிபடுத்தினால்தான் இந்த குழப்பத்திற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று தெரிகிறது.