ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான அனுஷ்கா, அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் மட்டுமே, எட்டு ஆண்டுகளாக நடித்து வருகிறார். தற்போது தான், 'ஜக்குதாதா என்ற கன்னட படத்தில், முதன் முதலாக நடிக்கிறார். இதுபற்றி, அவர் கூறுகையில், 'நான் பிறந்தது கர்நாடகத்தில் உள்ள, மங்களூர் தான் என்றபோதும், இதுவரை கன்னட படங்களில் நடிக்க வாய்ப்பு அமையாதது, மனதளவில் வருத்தமாக இருந்தது. இப்போது, அந்த வாய்ப்பு கிடைத்திருப்பதால் சந்தோஷமாக உள்ளது என்றார். 'அப்படியென்றால், அடுத்து இந்தி சினிமா பிரவேசம்தானா? என்று அனுஷ்காவைக் கேட்டால், 'அப்படியெல்லாம் எதுவும் இல்லை. என்னைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதே, எனக்கு திருப்தியாக உள்ளது. இந்தி படங்களில் நடிக்க வேண்டும் என, எப்போதும் ஆசைப்பட்டது இல்லை என்கிறார்.