ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
திமிரு, காளை போன்ற படங்களை இயக்கியவர் தருண் கோபி. இயக்குநராக இருந்தவர், திடீரென மாயாண்டி குடும்பத்தார் படத்தின் மூலம் ஹீரோவாகவும் மாறினார். தொடர்ந்து பேச்சியக்கா மருமகன், சரவணகுடில், கன்னியும் காளையும் செம காதல் போன்ற படங்களில் நடித்துள்ளார். தருண் கோபிக்கு இன்று(ஏப்ரல் 10ம் தேதி) பிறந்தநாள். தனது 34வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார் தருண் கோபி. பின்னர் மதியத்திற்கு மேல் ஏழை எளிய முதியோர்களுக்கு உணவு வழங்கினார். இந்த பிறந்தநாளில் அவர் ஒரு உறுதி மொழி ஏற்றுள்ளார். அது என்னவென்று அவரே சொல்லியுள்ளார்.
அதாவது, மனிதனுக்கு வாய்ப்பு வரும்போது அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். வாய்ப்பையும், நேரத்தையும் தவறவிட்டால் பல இழப்புகளை சந்திக்க நேரிடும். அது என் வாழ்விலும் நடந்துள்ளது. நேரத்தை தவறவிட்டதால் பல இழப்புகளை சந்தித்து விட்டேன். இனி நேரத்தையும், வாய்ப்பையும் தவற விடமாட்டேன். என்னுடைய பிறந்தநாளில் இதை நான் உறுதி மொழியாக ஏற்றுள்ளேன். இனி நான் கடுமையாக உழைக்க போகிறேன். குறிப்பாக டைரக்ஷனில் அதிக கவனம் செலுத்த போகிறேன். தற்போது கன்னியும் காளையும் படத்தில் நடித்து வருகிறேன். 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. நான் நடித்துள்ள பேச்சியக்க மருமகன் படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது என்றார்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தருண் கோபி...!!