இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தெய்வம் தந்த வீடு தொடரின் ஹீரோயின் மேக்னா. சினிமா நடிகைகள் போல மலையாள சீரியலில் இருந்து தமிழுக்கு வந்தவர். கேரளாவின் எர்ணாகுளம் சொந்த ஊர். அப்பா வளைகுடா நாட்டில் வேலை பார்க்கிறார். அம்மா நிம்மி மலையாள சினிமா மற்றும் சீரியல்களில் குணசித்திர நடிகை. விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பிச்சு அதன்பிறகு மலையாள சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். 6 சீரியல்களில் நடித்து முடித்து விட்டு தெய்வம் தந்த வீடு மூலம் தமிழ் சீரியலுக்கு வந்திருக்கிறார். நல்ல வாய்ப்புகள் தொடர்ந்து வந்தால் சென்னையிலேயே செட்டிலாயிடுவேன் என்கிறார் மேக்னா.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: மலையாளத்தில் 6 சீரியல்களில் நடிச்சாலும் அதில் கிடைத்த பாப்புலாரிட்டியை விட இரண்டு மடங்கு அதிகமாக தெய்வம் தந்த வீடு கொடுத்திருக்கிறது. தமிழ் நாட்டில் சீரியல் கதைகளை தங்கள் சொந்த கதைகளாக மக்கள் பார்க்கிறார்கள். படிக்காத வெகுளிப்பெண் கேரக்டர் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது. மலையாளத்தில் பரங்கிமலை என்ற படத்தில் ஹீரோயினாக நடிச்சிருக்கேன். இங்கேயும் சினிமா வாய்ப்புகளை எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன். சின்னத்திரை, பெரிய திரையில் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் அமைந்தால் இங்கேயே செட்டியலாயிடுவேன் என்கிறார் மேக்னா.