‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
விஜய், சமந்தா நடித்து வரும் படம் கத்தி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தினை ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன. கத்தி படத்தின் படப்பிடிப்பு கோல்கட்டா, ஐதராபாத், சென்னை ஆகிய ஊர்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி அன்று வெளியாக உள்ள இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். ஏறக்குறைய 40 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில் லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர், ராஜபக்சேவின் பினாமி என்றெல்லாம் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த விவகாரத்தினால், கத்தி படத்திற்கு கடும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் ஆகியோருக்கும் உலகத்தமிழர்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலிலிருந்து அவர்கள் மீண்டால் மட்டுமே உலகம் முழுக்க கத்தி படத்தை நிம்மதியாக வெளியிட முடியும் என்ற நிலையில், கத்தி படத்தின் தயாரிப்பாளர்களின் ஒருவரான ஐங்கரன் கருணாமூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்து இந்த பிரச்னை பற்றி விளக்கம் அளித்தார்....
"நான் இலங்கையில் பிறந்து வளர்ந்தவன். நாட்டை விட்டு 30 வருடங்களுக்கு முன்பே வெளியே வந்துவிட்டேன். நான் 27 வருடங்களாக சினிமாத்துறையில் இருக்கிறேன். ஐங்கரன் நிறுவனம் சார்பில் 2000 படங்களுக்கு மேலாக வெளிநாடுகளில் வெளியிட்டு இருக்கிறேன். 20 வருடங்களுக்கு மேலாக லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் எனக்கு நண்பர். அவர் இலங்கையில் முல்லைத்தீவை சேர்ந்தவர். அவர் 100 சதவீதம் தமிழர். அம்மா முல்லைத்தீவு, அப்பா திருக்கோணமலை. இப்போது லண்டனில் பிசினஸ் செய்து கொண்டு இருக்கிறார். லைகா நிறுவனம் உலகத்தில் நம்பர் ஒன் டெலிகாம் நிறுவனம். அவர்களுக்கு தொழில்முறை போட்டியாளர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் கிளப்பிவிடும் செய்திகள்தான் இவை.
2013-ல் சுபாஸ்கரன் கம்பெனியில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்தார்கள். நானும் உடன் போயிருந்தேன். அவர் பிறந்த இடம், உள்ளிட்ட இலங்கை முழுவதும் சுற்றிப் பார்த்தோம். தனியார் ஹெலிகாப்டர்கள் எல்லாம் இலங்கை விமானப் படையினரிடம் இருந்துதான் பெற முடியும். 25 பேர் அமரக்கூடிய இரண்டு ஹெலிகாப்டர்கள் எடுத்து, 5 நாட்கள் சுற்றிப் பார்த்தோம். அப்படிச் சுற்றிப் பார்த்ததில் அவர் நிறைய உதவிகளை பண்ண முன்வந்தார். இலங்கையில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வேண்டும் என்று இந்தாண்டு ரூ.20 கோடியும், அடுத்தாண்டு இன்னும் அதிகமாகவும் செய்ய முன் வந்திருக்கிறார். நாங்கள் போய் வந்தது அனைத்துமே உதவுவதற்காக மட்டுமே தவிர, வேறு எந்த ஒரு டீலிங்கும் கிடையாது. இலங்கை அரசிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும் அளவிற்கு லைகா நிறுவனம் சிறு நிறுவனம் அல்ல. ராஜபக்சேவுக்கும் சுபாஸ்கரனுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு கிடையாது." என்று நீண்ட விளக்கம் அளித்துள்ளார் கருணாமூர்த்தி.
அதோடு, கத்தி படத்தை தயாரிப்பதற்கு முன்பே கரு.பழனியப்பன் இயக்கத்தில் பிரிவோம் சந்திப்போம் படத்தை ஞானம் பிலிம்ஸ் என்ற பெயரில் லைகா நிறுவனம் தயாரித்த தகவலையும் சொன்னார். கருணாமூர்த்தி வெளியிட்ட இந்தத் தகவலினால் கரு.பழனியப்பனுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதுநாள் வரை தங்களை தமிழ் இன உணர்வாளராகக் காட்டிக் கொண்டு வரும் கரு.பழனியப்பனும் ரகசியமாக லைகா உடன் தொழில் உறவு வைத்துக்கொண்டது தற்போது அம்பலமாகிவிட்டது. இதன் காரணமாக லிங்குசாமியைத் தொடர்ந்து இவர்களும், தமிழ் இன உணர்வாளர்களால் இன துரோகிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும் இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்கிறது.