அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
பிரியாமணி ஒட்டி பிறந்த இரட்டையர்களாக நடித்த சாருலதா படத்தை இயக்கியவர் பொன்குமரன். இவர் தற்போது கன்னடத்தில் பிஸியாக இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இதுதவிர கோச்சடையான் படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் ரஜினியின் புதியபடத்திற்கு இவர் தான் கதை எழுதியுள்ளார். இந்நிலையில் கன்னடத்தில் இயக்கி வரும் இரண்டு படங்களில், ஒரு படத்திற்கு ஸ்ரீமதி ஜெயலலிதா என பெயர் வைத்துள்ளார். சரண் ஹீரோவாக நடிக்க, திஷா பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர கன்னட நடிகர்கள் நடிக்கின்றனர். ஸ்ரீதர் என்பவர் இசையமைக்கிறார்.
இப்படம் பற்றிய பேசிய பொன் குமரனிடம், அதென்ன படத்திற்கு 'ஸ்ரீமதி ஜெயலலிதா' என பெயர் வைத்துள்ளீர்கள் என்று கேட்டபோது, படத்தின் ஹீரோ ஜெயராஜ் எனும் கேரக்டரில் நடிக்கிறார். அவர் ஒரு இடத்திற்கு பெண் வேடமிட்டு செல்லும் போது தனது பெயரை ஜெயராஜ் என்பதற்கு பதிலாக ஜெயா என்று கூறுவார். அதையே படத்தின் தலைப்பாக்கி ஸ்ரீமதி ஜெயலலிதா என்று பெயர் வைத்துள்ளோம். இந்தப்படத்தின் தலைப்பிற்கு இதுவரை யாரும் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை. நல்ல ஜனரஞ்கமான படமாக ஜெயலலிதா படம் இருக்கும். மே 15ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளோம் என்றார்.