தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தி.மு.க. கழக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதி. தற்போது வளர்ந்து வரும் நடிகர். அவர் நடித்த ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படம் சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்தில் நடித்து வருகிறார். கருணாநிதியின் பேரன்கள் அரசியலுக்கு வருவதற்குத்தான் சினிமாவில் நுழைகிறார்கள் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. இதனை மறுத்த அருள்நிதி, நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: என்னோட அப்பாவே அரசியலில் இல்லாதபோது நான் எப்படி அரசியலுக்கு வருவேன். அரசியல் வாசனை இல்லாமல்தான் அப்பா என்னை வளர்த்திருக்கிறார். அரசியலில் ஈடுபாடுகாட்ட விடமாட்டார். அவரும் சில படங்கள் எடுத்துட்டு பிறகு சினிமாவில் இருந்து விலகிவிட்டார். நான் சினிமாவில் நடிக்க போகிறேன் என்று சொன்னதும் அரசியலுக்கு வரப்போகிறாயா? என்றுதான் கேட்டார்.
தாத்தாகிட்ட சினிமால நடிக்கப்போகிறேன்னு சொன்னதும் "நடிக்கிற வேலையை மட்டும் பார் அரசியலுக்கெல்லாம் வராதே"ன்னு சொல்லிட்டார். இன்னமும் நல்லா நடிக்கணும்னு சொல்லிகிட்டிருக்கிறார். "பிரமாதமா நடிச்சிருக்கே" என்று ஒரு சொல் அவர்கிட்ட வாங்கினா போதும். இப்போதைக்கு இதுதான் லட்சியம் என்கிறார் அருள்நிதி.