ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
நடிகை வித்யாபாலன் இந்திய பெண்களின் அடையாளமாக உலக நாடுகளில் பார்க்கப்படுகிறார். இதனால் அவரை இந்திய பாரம்பரியத்துடன் படம் எடுக்க உலகத்தில் உள்ள புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்கள், டிசைனர்கள் விரும்புகிறார்கள். வருகிற மே 1ந் தேதி முதல், 11ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இந்த விழாவின் விளம்பர தூதுவராக வித்யா பாலன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக அவர் தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டிசைனர் அகிரா கிசசோவா. எலிசபெத் படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றவர். மற்றொருவர் சூசல் டிமாசி. இவர்கள் இருவரும் வித்யாபாலனை ஆஸ்திரேலியாவின் அடையாளமாக இருக்கும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று புடவையில் விதவிதமாக படம் எடுத்தனர். புடவை தவிர சீனா, மற்றும் ஆஸ்திரேலியா கலாச்சார உடைகள் அணிவித்து படம் எடுத்தனர். இவர்கள் இருவரும் ஆசியர் ஒருவரை படம் எடுப்பது இதுவே முதல் முறையாகும். ஆஸ்திரேலியாவில் புடவையை பிரபலபடுத்த இது நல்ல வாய்ப்பாக அமையும் என்று டிசைனர் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.