தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் தெனாலிராமன் படத்துக்கு சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதோடு, தெனாலிராமன் படத்தில் வடிவேலு நடித்ததை கண்டித்து, சென்னை, சாலிகிராமத்தில் அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முயற்சி செய்தன. இதை திரையுலகம் கண்டுகொள்ளாமல் இருக்க, சில தினங்களுக்கு முன் சீமான் வடிவேலுவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார்.
சீமானைத் தொடர்ந்து, திரைப்பட இயக்குநர் வ.கௌதமனும் வடிவேலுவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளார். தமிழ்த்திரையுலகில் என்.எஸ்.கிருஷ்ணன், "டணால்"தங்கவேலு, கவுண்டமணி வரிசையில் நகைச்சுவையின் உச்சமான தமிழ்க்கலைஞன் வடிவேலு அவர்கள். அப்படிப்பட்ட ஒருவரை தமிழ் மண்ணில், அதுவும் அவரது வீட்டிற்கே வந்து ஒரு பெரும் கூட்டத்துடன் மிரட்டி விட்டு சென்றிருப்பது மிகவும் வேதனையளிப்பது மட்டுமின்றி, மானமுள்ள ஒவ்வொரு தமிழனையும் சீண்டிப் பார்க்கும் செயலாகும். இது மிக மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஒரு திரைப்படம் என்பது கதை ஆசிரியாரால் தொடங்கி, தயாரிப்பாளரால் திட்டமிடப்பட்டு, இயக்குநரால் செயல்படுத்தப்படுவது. அப்படியிருக்க நேரடியாக அதில் நடித்த நடிகனை முற்றுகையிடுவது என்பதும், அவமானப்படுத்துவதும், அச்சுறுத்துவதும் நேர்மையானதல்ல. தமிழினம் இந்த மண்னில் சாதி, மதம், மொழி, இனம் கடந்து அனைத்து கலைஞர்களையும், சாதனையாளர்களையும், சான்றோர்களையும் போற்றி பாதுகாத்த இனம். மாற்றாரை வாழ வைத்த இனம் மட்டுமல்ல, ஆள வைத்த இனமும் கூட.
தமிழ்த்திரையுலகில் கிட்டத்தட்ட எழுவது சதவிகதத்தினர் (குறிப்பாக நடிக,நடிகையர்கள்) தமிழர்கள் அல்லாது பிற மாநிலத்தவர்கள் அல்லது பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்களே கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் இதுவரை நாங்கள் பிரித்து பார்க்காமல் ஒரே குடும்பமாக கூடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்."தெனாலி ராமன்" பட விவகாரத்தில் சகோதரர் வடிவேலுவிடம் அத்துமீறியவர்களின் செயல்பாடுகளை நினைத்துப் பார்க்கும் போது எங்கே இதற்கெல்லாம் வேட்டு வைத்துவிடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
வடிவேலு அவர்கள் இனம், மொழி பார்க்காமல் அனைவரையும் சிரிக்கவைத்த ஒரு மகா கலைஞன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் திரைக்கு வருவதை தமிழ் மக்கள் மகிழ்ச்சியோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். சம்மந்தப்பட்டவர்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால் தயாரிப்பு நிறுவனத்தை அனுகி உரிய முறையோடு நடந்து கொள்வது என்பதுதான் அவர்களுக்கும் நல்லது மற்றவர்களுக்கும் நல்லது.அதனை விடுத்து இது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவதை சகோதரர் வடிவேலுவிடம் மட்டுமல்ல தமிழ் மண்ணில் தனிப்பட்ட ஒரு தமிழனிடமோ அல்லது ஒட்டுமொத்த தமிழினத்தையோ உரசிப்பார்க்கும் நிகழ்வாகக் கருதி அதற்க்கேற்ற பின்விளைவுகளை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும் என்பதை கோடிக்கணக்கான மானமுள்ள தமிழர்களின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
என்று தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் வ.கௌதமன்.