அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் சயீப் அலிகானும் ஒருவர். இவர் ஏப்ரல் மாதம் 23 முதல் 27-ந்தேதி வரை அமெரிக்காவில் நடைபெற உள்ள ஒரு விருது வழங்கும் வழாவில் கலந்து கொள்ளயிருந்தார். ஆனால் இந்த தேதிக்குள்தான் மும்பையில் சயீப்அலிகான் குடியிருக்கும் தானே ஏரியாவுக்கு லோக்சபா தேர்தல் வருகிறது.
அதனால் அமெரிக்காவில் நடக்கும் விருது விழாவுக்கு அவர் சென்றால் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும். ஆனால் இதைப்பற்றி சயீப்அலிகான் கவலைப்படாமல் அமெரிக்க செல்ல முடிவெடுத்து விட்டார். ஆனால் அந்த பகுதியைச்சேர்ந்த எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக் என்பவர், இதுகுறித்து ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளாராம்.
அதில், பத்மஸ்ரீ விருது பெற்ற ஒரு முன்னணி நடிகர், மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர். வாக்குச்சாவடிக்கு சென்று ஜனநாயக உரிமை செலுத்தாமல் அமெரிக்கா செல்வதை அனுமதிக்கக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து ஜனாதிபதி இன்னும் முடிவெடுக்கவில்லை என்றபோதும், இந்த விசயம் மீடியாக்களில் பரவியதையடுத்து, என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப்போயிருக்கிறாராம் சயீப்.