மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்ததினாலோ என்னவோ தரையில் கால்படாமல் வானத்தில் மிதந்து கொண்டிருந்தார் சிவகார்த்திகேயன். அதோடு அவரும் மீடியாவிலிருந்து வந்ததாலோ என்னவோ, மீடியாக்களை மதிக்காமல், அவர்களை சகட்டுமேனிக்கு கிண்டல் பண்ணி வந்தார். அவர் நடித்த படங்களின் புரமோஷனுக்கு வரும்போது, பல தொலைக்காட்சிகள் அவரிடம் பைட்ஸ் கேட்கும். அப்போது, டிஸ்கவரி சேனல் தவிர எல்லா சேனலும் வந்திடுச்சு போலருக்கு என்றும், கொஞ்சம் விட்டால் கேமரா மொபைல் வச்சிருக்கிற ஆட்களுக்குக் கூட பேட்டி கொடுக்கணும் போலருக்கே? என்றெல்லாம் ஏகத்துக்கும் லூஸ் டாக் விட்டார்.
மான் கராத்தே படத்தின் இசைவெளியீட்டுவிழாவுக்கு பவுன்சர்களை பாதுகாப்புக்கு அழைத்து வந்த விவகாரத்தில் மீடியாக்கள் சிவகார்த்திகேயனை உண்டு இல்லை என்று ஒருவழி பண்ணிய பிறகு சற்றே அடங்கினார். தற்போது மான் கராத்தே படம் வெளியாகி இருக்கும்நிலையில், மீடியாக்களின் பலம் என்ன? அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்றெல்லாம் சிவகார்த்திகேயனுக்கு க்ளாஸ் எடுத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அதன் பிறகு மீடியாக்களிடம் அநியாயத்துக்கு பணிவு காட்டி வருகிறார் சிவகார்த்திகேயன்.
வெரிகுட்..! இப்படித்தான் சமர்த்தா இருக்கணும் பீட்டரு..!