மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
ராவணன், கடல் படங்களின் அதிர்ச்சி தோல்விகளுக்குப்பிறகு அடுத்த படத்தை இயக்குவதில் அதிக காலதாமதம் செய்து கொண்டிருக்கிறார் மணிரத்னம். மணிரத்னம் படங்களென்றால் அதிக நம்பிக்கையுடன் தியேட்டருக்கு சென்ற ரசிகர்களின் நம்பிக்கையை இந்த இரண்டு படங்களும் கெடுத்து விட்டதால், மீண்டும் பழைய நம்பிக்கைக்குரிய மணிரத்னமாக வேண்டும் என்பதற்காக புதிய படத்தின் கதை விசயத்தில் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார் அவர்.
ஆனால், இந்த படத்தில் பழைய கூட்டணிகளான நாகார்ஜூனா, ஐஸ்வர்யாராய் ஆகியோரையும் சேர்த்திருப்பதால் பழைய சாயல் வந்து விடுமோ என்ற கருத்தினையும் சிலர் அவர் முன்பு வைத்தபோது, இப்படத்தில் மகேஷ்பாபுதான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அந்த வகையில் என் படத்துககு அவர் புதியவர்தான் என்று பதிலுரைத்துள்ள மணிரத்னம், இப்படத்தை தயாரிப்பதற்கு யாராவது மெகாப்பட தயாரிப்பாளர்கள் முன்வருவார்களா? என்று காத்திருந்தார்.
ஆனால், அப்படி யாரும் வருவதற்கான சூழ்நிலை இல்லை என்பதால், இப்போது மீண்டும் தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலமே புதிய படத்தை தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் அவர்.