சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
கெளதம்மேனன் இயக்கும் அஜீத்தின் 55வது படத்தின் படப்பிடிப்பு நாளை 9-ந்தேதி தொடங்கப்படவிருக்கிறது. ஆனால் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் அஜீத்துக்கு இரண்டு கதாநாயகிகள் இருந்தபோதும் இன்னும் ஒருவர் பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. காரணம், ஒரு கதாநாயகி அனுஷ்கா என்று முடிவாகி விட்டபோதும், இன்னொரு கதாநாயகியாக யாரை ஒப்பந்தம் செய்யலாம் என்பதில் பலத்த குழப்பம் நீடித்து வருகிறது.
இதுவரை ஐ படத்தில் நடித்துள்ள எமிஜாக்சன்தான் அந்த இன்னொரு நாயகி என்றார்கள். ஆனால் இப்போதோ, த்ரிஷாவை அந்த வேடத்துக்கு புக் பண்ணலாம் என்று கெளதம்மேனன் தரப்பு நினைக்கிறதாம். ஆனால், அஜீத்தரப்போ, அவருடன் த்ரிஷா இணைந்த ஜி, கிரீடம் என்ற இரண்டு படங்களும் ப்ளாப் ஆனதால், எதற்கு திரும்பவும் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்கிறார்களாம்.
ஆக, அஜீத்தரப்பு த்ரிஷாவை வேண்டாம் என்று சொல்ல, கெளதம்மேனன்தரப்பு வேண்டும் என்று சொல்ல, ஆளுகொரு பக்கம் இழுத்துக்கொண்டிருக்கிறார்களாம். இருப்பினும் இன்னும் சில நாட்களில் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டு விடும் என்கிறார்கள். அதன்பிறகுதான் ஜெயித்தது த்ரிஷாவா? இல்லை எமி ஜாக்சனா? என்பது தெரியவரும்.