சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இயக்கி வரும் படத்தைத் தயாரிப்பது லண்டனைச் சேர்ந்த லைகா மொபைல் என்ற நிறுவனம். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் லைகா மொபைல் உலகின் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் மொபைல் சேவையை வழங்கி வருகிறது.
விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இருவருக்கும் தலா 20 கோடி சம்பளம் கொடுக்க முன் வந்த காரணத்தினால் லைகா மொபைல் நிறுவனத்திற்கு படம் பண்ண ஒப்புக்கொண்டனர். கத்தி படப்பிடிப்பு தொடங்கிய சில மாதங்களில் லைகா மொபைல் நிறுவனம் பற்றி அதிர்ச்சி தகவல் இணையதளங்களில் வெளியானது. அதாவது இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் குடும்பத்துக்கு நெருக்கமானவரில் நிறுவனம்தான் இந்த லைகா மொபைல் என்பது அந்த அதிர்ச்சி தகவல்.
இத்தகவல் உலகம் முழுக்க பரவியதால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு மட்டுமல்ல, விஜய்யுக்கும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. உலகத்தமிழர்களின் எதிர்ப்பை சமாளிப்பதற்காகவே கத்தி படத்திலிருந்து லைகா மொபைல் நிறுவனத்தை வெட்டிவிடலாமா? தானே கத்தி படத்தை தயாரிக்கலாமா என்று ஏ.ஆர்.முருகதாஸ் ஆலோசனை செய்து வருகிறாராம்!