பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
கனா காணும் காலங்கள் தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் இர்பான். அதற்கு பிறகு பட்டாளம் படத்தில் பள்ளி மாணவராக நடித்தார். எப்படி மனசுக்குள் வந்தாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப் படம் ஓடவில்லை. அதற்கு பிறகு சுண்டாட்டம் படத்தில் நடித்தார். அது சுமாராக ஓடினாலும் சினிமாவில் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பினார். தற்போது சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டாம் பாகத்தில் சரவணனாக நடித்து வருகிறார். சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்தாலும் அவரது பெரிய திரை கனவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. எதிர்வீச்சு என்ற படத்தில் நடித்தார். மலேசியாவில் தயாரான இந்தப் படம் மலேசியாவில் சுமாராக ஓடியது. தமிழ்நாட்டில் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.
தற்போது பொங்கி எழு மனோகரா என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சும்மா நச்சுனு இருக்கு பட ஹீரோயின் அர்ச்சனா நடித்து வருகிறார். இது அம்மா-மகன் செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் கதை. இந்த படம் தனக்கு திருப்புமுனை தந்தால் சின்னத்திரையிலிருந்து விலகிவிடும் மனநிலையில் இருக்கிறார் இர்பான்.