டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
எல்லா ஹீரோக்களுக்கும் போலீஸ் கேரக்டரில் நடிப்பது என்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரி. அந்த வரிசையில் அருள்நிதியும் சேர்ந்துவிட்டார். அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் என்ற படத்தில் காமெடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். ஸ்ரீகிருஷ்ணா என்ற புதுமுகம் படத்தை இயக்குகிறார்.
ஒரு கிராமத்தில் உள்ள எல்லோரும் நல்லவரே. அந்த கிராமத்தில் எந்த பிரச்னையும் வந்ததில்லை. ஒரு குற்றமும் நடந்ததில்லை. முதன் முறையாக அந்த ஊருக்குள் போலீஸ் நுழைகிறார்கள். அதன் பிறகு அந்த கிராமத்தில் எல்லாமே நடக்க ஆரம்பித்து விடுகிறது. அது எப்படி என்பதுதான் கதை. "படத்தோட தலைப்பையும், கதையையும் பார்த்துவிட்டு ஏதோ போலீசை தாக்குற சீரியசான படம்னு நினைக்காதீங்க. இது காமெடி எண்டர்டெயின்மெண்ட் படம்" என்கிறார் இயக்குனர் கிருஷ்ணா. சிங்கம்புலி, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் புகழ் பகவதி பெருமாள், ராஜ்குமார் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்த வருகிறது.