தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆத்தா உன் கோவிலிலே, மிட்டா மிராசு, மாங்கல்யம் தந்துனானே படங்களில் ஹீரோவாக நடித்த ரவிராகுல் தனது பெயரை கே.ர.ராகுல் என்று மாற்றிக் கொண்டு இயக்கும் படம் கலர் கண்ணாடிகள். அஸ்வின் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். திவ்யாஸ்ரீ என்ற சிண்டியன் இன பெண் ஹீரோயினாக நடிக்கிறார். மலேசிய தாய்க்கும், இந்திய தந்தைக்கும் பிறந்தவர்கள் கலப்பு இனமாக சிண்டியன் என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது ஆங்கிலோ இந்தியன் மாதிரி. சிண்டியன் இன பெண் சினிமாவில் நடிப்பது இதுவே முதல் முறை.
தமிழ்நாட்டில் மேடை பாடகனாக இருக்கும் ஒரு இளைஞன் மலேசியாவிற்கு பார் பாடகனாக செல்கிறான். அங்கு சென்ற இடத்தில் திவ்யஸ்ரீயை காதலிக்கிறான். அதனால் வரும் ஒரு பிரச்சினைகள்தான் படத்தின் கதை. முழு படமும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. இது லவ் திரில்லர் வகை கதை.