பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குனர் பாலா இயக்கும் அடுத்த படம் 'தாரை தப்பட்டை'. சசிகுமார், வரலட்சுமி, விஜய் சேதுபதி நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார், செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் கதை, வசனம் எழுதியுள்ளார். சசிகுமார் தன் தாடியை எடுத்துவிட்டு தவில் வாசிக்க கற்றுக் கொண்டு வருகிறார். வரலட்சுமி கரகாட்டம் ஆட கற்றுக் கொண்டு வருகிறார். மற்ற நடிகர்களுக்காக தேர்வும், ஒத்திகையும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தாரை தப்பட்டையின் கதை லேசாக கசிந்துள்ளது. கசிந்த வரையில் கதை இதுதான்:
இசையை உயர்மூச்சாக நினைக்கும் பிராமணகுலத்தில் பிறந்த சசிகுமாரை பெரிய மிருதங்க வித்வானாக்க அவர் குடும்பம் விரும்புகிறது. ஆனால் சசிகுமாருக்கோ தவில் வித்தவானாகவே விருப்பம். மிருதங்கத்தை விட தவிலையே நேசிக்கிறார். மிருதங்கம் பணக்காரர்களின் இசை. தவில் ஏழைகளின் இசை என கருதுகிறார்.
வீட்டின் எதிர்ப்பையும் மீறி தவில் கற்று கரகாட்ட குழுவில் சேர்கிறார். ஊர் ஊராக சென்று கோவில் திருவிழாக்கள், தெருக்களில் கரகாட்டத்துக்கு தவில் வாசிக்கிறார். பிராமண குலத்தில் பிறந்தவன் சபாக்களில் மிருதங்கம் வாசிப்பதை விட்டுவிட்டு இப்படி தெருவில் நின்று தவில் வாசிக்கிறானே என்று குடும்பத்தினருக்கு கவலை.
இந்த நிலையில் சசிகுமாரின் குரூப்பில் வந்து சேர்கிறார் கரகாட்டக்காரி வரலட்சுமி. அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். வரலட்சுமியின் அழகும், திறமையும் சசிகுமாரை கவர்ந்துவிட இருவரும் காதலிக்கிறார்கள். மிருதங்கத்தை விட்டுவிட்டு தவில் வாசிப்பதற்கே எதிர்ப்பு தெரிவிக்கும் சசிகுமார் குடும்பம் காதலுக்கு சம்மதித்து விடுமா? அவருக்கு பரதநாட்டியம் ஆடும் ஒரு பிராமண பெண்ணை மணம் பேசி முடிக்கிறார்கள். மிருதங்கத்தை விட தவில்தான் பெரிய இசை என்றும், பரதநாட்டியத்தைவிட கரகாட்டம்தான் நல்ல கலை என்றும் சசிகுமார் எப்படி நிரூபிக்கிறார் என்பதுதான் கதையாம்.