திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
சமீபகாலமாக தனது மனதில் பட்ட கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்து பெரிய கருத்து கந்தசாமியாகி வருகிறார் சமந்தா. பாராளுமன்ற தேர்தல் தொடங்கியபோது சமந்தா அரசியலுக்கு வருகிறார். அவரது தந்தை வேட்பாளராக போட்டியிடுகிறார் என்று வந்த செய்திகளையெல்லாம் வதந்தி என்று உடனடியாக பதில் கொடுத்து சர்ச்சைகளை ஊதி தள்ளினார் சமந்தா.
இதனால் அவருக்கு மனதளவில் சுத்தமாக அரசியல் ஆசை இல்லை என்பதை வெளிப்படுத்தினார். அதேசமயம், ஒரு சராசரி குடிமகளாக தனது கருத்துக்களை அவர் சொல்வதை நிறுத்தவில்லை. நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். அதோடு, தங்களது ஓட்டுக்களை வீணடிக்காமல் சரியான தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று டுவிட்டரில் கேட்டுக்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், இதுவரை தனக்கு பிடித்த தலைவர் பற்றி வெளிப்படையாக சொல்லாமல் இருந்த சமந்தா, இப்போது நரேந்திர மோடிதான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர். அவர் நல்ல திறமையான தலைவர் என்று தனது தனிப்பட்ட கருத்தினை தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த வெளிப்படையான பேச்சு பலருக்கு ஆச்சர்யத்தையும், அரசியல் வட்டாரங்களில் சர்ச்சைகளையும ஏற்படுத்தியுள்ளது.