பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தமிழ்நாட்டில் பலமான ரசிகர் மன்றங்களில் விக்ரம் ரசிகர் மன்றமும் ஒன்று. விக்ரம் படங்களின் தொடர்தோல்வி, ஐ படத்திற்காக கெட்-அப் மாற்றி இரண்டு வருடங்கள் வெளியில் வராமல் இருந்தது போன்ற காரணங்களால் அவரால் மன்றத்தை கவனிக்க முடியவில்லை. மன்றத்தின் செயல்பாடுகளும் மந்தமாகி விட்டது. தற்போது ஐ படத்தை முடித்துவிட்ட விக்ரம் இனி வருடத்திற்கு இரண்டு படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதனால் தனது ரசிகர் மன்றங்களுக்கு புத்துணர்வளிக்க முடிவு செய்திருக்கிறார்.
இதன் முதல்கட்டமாக தமிழ்நாடு முழுக்க ரகசிய சுற்றுப்ப பயணம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து வருகிறார். இதில் மாவட்டம் வாரியாக சென்று ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்துப் பேசுகிறார். ஐ படத்திற்கு பிறகு சென்னை அல்லது கோவையில் தனது ரசிகர் மன்ற மாநாட்டை பிரமாண்டமாக நடத்த இருக்கிறார்.