ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பூமணி, பூந்தோட்டம், மிட்டாமிராசு உள்பட பல படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம். அதையடுத்து பல ஆண்டுகளாக படங்களே இயக்காமல் இருந்த அவர், பின்னர் சில ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டார். ஆனால் யாரும் நடிக்க முன்வராததையடுத்து கருங்காலி என்ற படத்தில் தானே கதாநாயகனாகி விட்டார்.
அதோடு, அப்படத்தில் அஞ்சலியை கதாநாயகியாக்கினார். ஆனால் படம் ஹிட்டடிக்கவில்லை. இருப்பினும் அதையடுத்து ஊர்சுற்றி புராணம் என்றொரு படத்தை ஆரம்பித்தார். அதிலும் அஞ்சலிதான் நாயகி. ஆனால், திடீரென்று சித்தியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால், களஞ்சியத்தின் மீதும் குற்றம் சாட்டி விட்டு ஆந்திராவுக்கு ஓடிப்போன அஞ்சலி இதுவரை தமிழ்நாட்டு பக்கமே தலைவைத்து படுக்கவில்லை.
அதையடுத்து, என் படத்தில் நடித்தேயாக வேண்டும் என்று அஞ்சலிக்கு பல எச்சரிக்கை விடுத்தார் களஞ்சியம். அதோடு சினிமா அமைப்புகளிலும அவர் மீது புகார் செய்தார். எதுவும் எடுபடவில்லை. அதையடுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அது நடந்து கொண்டேயிருக்கிறது.விளைவு ஊர் சுற்றி புராணம் கிடப்பில் கிடக்கிறது.
இந்த நிலையில், அடுத்து நடிப்பு அவதாரத்தை தொடங்கியிருக்கிறார் களஞ்சியம். ஏற்கனவே கருங்காலியில் நெகடீவ் ரோலில் நடித்தவர், இப்போது களவு தொழிற்சாலை என்ற படத்தில் சிபிசிஐடி வேடத்தில் நடிக்கிறார். இதையடுத்து தனக்கேற்ற வேடங்கள் வந்தால் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டருக்கிறாராம் அவர்.