பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
உண்மை படத்தின் இயக்குனர் ரவிகுமார் மீது பாலியல் தொந்தரவு மற்றும் கொலை மிரட்டல் விடுத்தார் என்று அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை சுஜிபாலா போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் சுஜிபாலாவும் நானும் கணவன் மனைவியாக வாழ்ந்தோம் என்று கூறி அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் ரவிகுமார் வெளியிட்டார். அத்துடன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எனக்கும் சுஜிபாலாவுக்கும், திருமண நிச்சயதார்த்தம் மட்டுமல்ல திருமணமே நடந்து விட்டது. அவர் என் மனைவி. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அவற்றில் சிலவற்றை மட்டும் இப்போது வெளியிட்டுள்ளேன்.ஆனால் அவரது தாயார்தான் ஆளை வைத்து என்னை மிரட்டுகிறார். நான் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக குற்றம் சாட்டுகிறார். கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார். நான் அவரை அடித்து உதைத்ததாக கூறியுள்ளார். ஒரு கணவன் என்ற முறையில் அவரது தவறான நடவடிக்கைகளை கண்டித்துள்ளேன். அடிக்கும் அளவிற்கு நான் மோசமானவன் அல்ல.
நான் உண்மை, இன்றைய செய்தி, லவ் பண்ணலாமா வேண்டாமா என்ற படங்களை தயாரித்து இயக்கி வருகிறேன். பெண்களிடம் எப்படி நடந்து கொள்வேன் என்பதை இந்த படங்களில் பணியாற்றும் பெண்களிடம் விசாரித்து தெரிந்து கொள்ளலாம். நான் சுஜிபாலாவுக்கு கார், பங்களா, தோட்டம் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. உண்மை படத்தை முடிக்க முடியாமல் போனதற்கே சுஜிபாலாதான் காரணம். படப்பிடிப்புக்கு அழைத்த போதெல்லாம் அவரது தாயார் அவரை அனுப்ப மறுத்து பிரச்சனை செய்தார். அதனால் தான் படத்தை முடிக்க முடியவில்லை.
நான் ஏற்கெனவே திருமணமானவன்தான். ஆனால் விவாகரத்து செய்து விட்டு பிரிந்து வாழ்கிறேன். இது தெரிந்துதான் அவர் என்னை காதலித்தார். கழுத்தை நீட்டினார். சுஜிபாலா சில தவறான தொடர்புகளை வைத்துக் கொண்டு எனக்கு தீங்கு செய்து வருகிறார். அவர் என் மீது கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.
இவ்வாறு ரவிகுமார் அறிக்கையில் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள படங்களை பார்க்க மேலும் படங்கள் கிளிக் செய்யவும்.