ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை சுஜிபாலா, உண்மை என்ற படத்தில் நடித்த போது அதன் இயக்குனர் ரவிகுமார் தன்னை வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய முயன்றதாகவும் அதற்கு மறுத்த தனக்கு கொலைமிரட்டல் விடுத்து வருவதாகவும் சென்னை வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறை, இயக்குனர் ரவிகுமார் பற்றி தீவிரவமாக விசாரித்து வருகிறது. "டைரக்டர் ரவிகுமார் மீது நடிகை சுஜிபாலா கொடுத்த புகார் பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம். இயக்குனர் ரவிகுமாரை அழைத்து விசாரிக்க இருக்கிறோம். இதற்குமேல் இதுபற்றி இப்போது எதுவும் கூற இயலாது" என்றார் வடபழனி உதவி ஆணையர் சுப்பாராமன்.
இதற்கிடையில் இயக்குனர் ரவிகுமார் "சுஜிபாலாவும் நானும் கணவன் மனைவியா வாழ்ந்தோம்" என்று கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: உண்மை படத்தை ஆரம்பித்தபோதே எனக்கும் சுஜிபாலாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்தோம். அவர் தற்கொலைக்கு முயன்றதால் பிரிந்து விட்டோம். மீண்டும் படப்பிடிப்பு நடந்தபோது மீண்டும் காதலிக்க ஆரம்பித்தோம். அவர் எனக்கு தங்க சங்கிலி பரிசளித்துள்ளார். எங்களை சுஜிபாலாவின் தாயார்தான் பிரித்து விட்டார். சுஜிபாலா இன்னொருவருடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவருடன் உள்ள படத்தை பேஸ்புக்கில் போட்டிருந்தார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது வந்த தகராறில் அவரை நான் அடித்தது உண்மைதான். அந்த ஆத்திரத்தில்தான் இப்போது என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்" என்று ரவிகுமார் கூறியிருக்கிறார்.
சுஜிபாலா, ரவிகுமார் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இருக்குமானால் இன்று அல்லது நாளை அவர் கைது செய்யப்படலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.