இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நான் படத்தில் நாயகனாக நடித்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது சலீம், திருடன் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதனால் படங்களில் நடித்துக்கொண்டே அப்படங்களுக்கான பாடல்களுக்கு இசையமைக்கும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
குறிப்பாக, சலீம் படத்திற்கு தேவையான ஒரு கிளப் பாடலின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே பாடலையும் பதிவு செய்து உடனுக்குடன் ஸ்பாட்டுக்கு அனுப்பிக்கொண்டேயிருந்தாராம். அதாவது முதலில் பல்லவியை அனுப்பியவர், பின்னர் சரணங்களையும் அடுத்தடுத்து ஸ்பாட்டுக்கு அனுப்பி விட்டு அதை படமாக்க வைத்திருக்கிறார். இத்தனையும் ஒரேநாளில் நடந்திருக்கிறது.
இந்த பாடலை எழுதியுள்ள கவிஞர் ப்ரியன், அப்போது மகாபலிபுரத்தில் இருந்தாலும், அவருக்கு சென்னையில் இருந்தபடியே டியூனை அனுப்பிக்கொடுத்து முதலில் பல்லவி, பின்னர் சரணம் என ஒவ்வொன்றாக உடனுக்குடன் வாங்கி அப்படியே பதிவு செய்து படப்பிடிப்பு நடக்கும் ஸ்பாட்டுக்கு அனுப்பியிருக்கிறார். அதை உடனே சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் போட்டுள்ள செட்டில் படமாக்கியிருக்கிறார்கள்.
ஆக, இதுவரை பாடல்களை முன்பே பதிவு செய்து பின்னர்தான் அதன் படப்பிடிப்பை நடத்தினார்கள்.. ஆனால் இப்போதுதான், ஸ்பாட்டில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க, அதற்கான பாடலை அப்போதே ரெக்கார்டிங் தியேட்டரில் இருந்து பதிவு செய்து அனுப்பி படமாக்கும் புதிய முறை கோலிவுட்டில் தந்திருக்கிறார். அதை முதன்முறையாக தொடங்கி வைத்திருக்கிறார் விஜய்ஆண்டனி.