ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2010ல் வெளியான பாணா காத்தாடியில் அறிமுகமான அதர்வா, அதையடுத்து முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி போன்ற படங்களில் வருடம் ஒரு படமாக நடித்தவர், இப்போது 2014ல் ஒரே வருடத்தில் இரும்புக்குதிரை, ஈட்டி, கணிதன் என மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும், முதல் இரண்டு படங்களில் காதல் கதைகளில் நடித்த அதர்வா, பின்னர் பாலாவின் பரதேசியில் தேயிலை தோட்டத்தில் கொத்தடிமையாக்கப்படும் கேரக்டரில் நடித்திருந்தார். அந்த வகையில், அந்த படங்களில் பர்பாமென்சுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர், இப்போது நடித்து வரும் மூன்று படங்களிலுமே ஆக்சன் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதில், இரும்புக்குதிரையில் பைக்ரேஸ் வீரராகவும், ஈட்டியில் ஓட்டப்பந்தய வீரராகவும் நடித்து வரும் அதர்வா, இந்த இரண்டு படங்களுக்காகவும் கடின உடற்பயிற்சி செய்து நடித்துள்ளார். அதனால், அந்தந்த கதாபாத்திரங்களாகவே தான் மாறியிருப்பதாக சொல்லும் அதர்வா, இனி நான் நடிக்கும் எந்தவொரு படமாக இருந்தாலும் அந்த கேரக்டராகவே மாறிவிடுவேன். அந்த வகையில், அதர்வா இப்படித்தான் நடிப்பார் என்று எனக்கென்று பாணியை உருவாக்கிக்கொள்ளாமல், கதையின் நாயகனாகவே வலம் வருவேன் என்கிறார்.