பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இலங்கைக்கு எந்த தமிழ் சினிமாத்துறையினரும் செல்வதில்லை என்ற கட்டுப்பாட்டை தமிழ் திரையுலகம் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அதனால்தான் எந்த தமிழ்ப்படங்களின் படப்பிடிப்பும் அங்கு நடைபெறுவதில்லை.
இந்த நிலையில், கனடாவில் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் நடத்திய விழா ஒன்றில் நடிகை த்ரிஷா கலந்து கொண்டதாக தமிழ் அமைப்புகள் அவருக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பியுள்ளன. மேலும், அந்த விழாவை நடத்தியதும் ஒரு தமிழர் அமைப்புதான் என்றாலும், அவர்கள் அனைவரும் ராஜபக்சேவுக்கு நெருக்கமான டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் என்று மற்ற தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன. அதன்காரணமாகவே த்ரிஷா அவர்கள் நடத்திய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது தவறு என்று போர்க்கொடி பிடித்து வருகின்றனர்.