தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக்க வேண்டும் என்பது மணிரத்தினத்தின் நீண்ட நாள் கனவு. பலமுறை அதற்கான முயற்சிகள் எடுத்து பின் வாங்கியிருக்கிறார். இப்போது தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சரித்திர கதைகளுக்கு வரவேற்பு கிடைத்து வருவதால் இந்த முறை பொன்னியின் செல்வனை படமாக்குவதில் தீவிரமாக இருக்கிறார். இதற்காக இந்தியா முழுவதும் சென்று லொக்கேஷன் பார்த்து வந்துள்ளார். ஸ்கிரிப்ட் பணிகளையும் முடித்து விட்டார்.
இந்தப் படத்தில் மகேஷ்பாபுவை ஹீரோவாக நடிக்க வைக்க முயற்சித்தார். நேரடி தமிழ் படத்தில் அறிமுகமாகும் ஆசையுடன் இருந்த மகேஷ்பாபு இதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் நீண்ட தலைமுடி வளர்க்க வேண்டும். ஒன்றரை ஆண்டுகள் ஒதுக்கித் தரவேண்டும் என்கிற சூழ்நிலை வந்ததும் தன்னால் முடியாது என்று ஒதுங்கிக் கொண்டார். காரணம் 2015 கடைசி வரை மகேஷ்பாபுவின் கால்ஷீட் டயரி நிறைந்து விட்டது.
இதனால் மணிரத்னம், பொன்னியின் செல்வன் கதைக்கு நாகார்ஜுனாவை கொண்டு வருகிறார். மூன்று மொழிகளிலும் முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். அவர்கள் மூன்று மொழிக்கும் அறிமுகமானவர்களாக இருக்க வேண்டும் என்பது மணிரத்தினத்தின் விருப்பம், இன்னும் தமிழ், மலையாள மொழி நடிகர்கள் தேர்வாகவில்லை. 25 வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் நாகர்ஜுனாவை வைத்து தெலுங்கில் கீதாஞ்சலி என்ற படத்தை இயக்கினார். அது தமிழில் இதயத்தை திருடாதே என்ற பெயரில் வெளியாகி பெரும் பெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.