'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
திரு திரு துறு துறு படத்தை இயக்கியவர் நந்தினி. இவர் தற்போது கொலை நோக்கு பார்வை என்ற படத்தை இயக்கி வந்தார். கார்த்திக்குமார், ராதிகா ஆப்தே நடித்து வந்த இந்தப் படத்தை லிப்ரா புரொடக்ஷன் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்து வந்தார். கடந்த ஆண்டு ஜுன் மாதம் தொடங்கப்பட்ட இந்தப் படம் தயாரிப்பாளரின் நிதி நெருக்கடி காரணமாக படப்பிடிப்பு நடக்காமலே இருந்தது. பிப்ரவரி மாதம் 9 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன் பிறகு நடக்கவில்லை. இப்போது படத்தை டிராப் செய்து விட்டதாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். தற்போது அவர் நளனும் நந்தினியும் படத்தை வெளியிடும் முயற்சியில் இருக்கிறார்.
படத்தை தொடர்ந்து எடுக்க தயாரிப்பாளரின் நிதி சரியில்லை என்றும், இதனால் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தரக்குறைவாக பேசிக் கொண்டதால்தான் படத்தை தயாரிப்பாளர் டிராப் செய்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.