ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
கோடை வெயில் சுட்டெரித்து வரும் வேளையில், மதுரை மக்களை குளிர்விக்க இன்னிசை மழையை பொழிய போகிறார்கள் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா குழுவினர். மதுரையில், ஏப்ரல் 5ம் தேதி, தமுக்கம் மைதானத்தில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார் கார்த்திக் ராஜா. ராஜாவின் சங்கீத திருநாள் எனும் பெயரில் நடக்கும் இந்நிழ்ச்சியில், இசைஞானி இளையராஜாவும் பங்கேற்று பாட இருக்கிறார். கூடவே பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், மனோ, சித்ரா, சாதனா சர்க்கம், ஹரிச்சரண், விஜய்பிரகாஷ் உள்ளிட்டவர்களும் பங்கேற்று பாட உள்ளனர்.
முன்னதாக ஏப்ரல் 1ம் தேதியே மதுரை வந்துவிட்டனர் இளையாராஜா, கார்த்திக் ராஜா மற்றும் அவரது குழுவினர். தற்போது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மதுரை, தமுக்கம் மைதானத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. மதுரை மக்கள் இதுவரை பார்த்திராத அளவுக்கு பிரமாண்ட இசை மேடை அமைக்கப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான வண்ண வண்ண அலங்கார விளக்குகளும் பொறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 15 நாட்களாக வேலையாட்கள் பணியாற்றி வருகின்றனர். கூடவே கார்த்திக் ராஜா தலைமையில் பின்னணி பாடகர்கள், வாத்திய கலைஞர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏப்ரல் 5ம் தேதி நடக்கும் இந்த இன்னிசை நிகழ்ச்சியோடு, இளையராஜாவின் ரசிகர் மன்ற துவக்க விழாவும், கூடவே கார்த்திக் ராஜா இசையமைத்து, அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள வாராயோ வெண்ணிலாவே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் பிரமாண்டமாய் நடைபெற இருக்கிறது.
மொத்தத்தில், கோடை வெயிலின் சுட்டெரிப்பால் மதுரை மக்கள் வாடி வதங்கி வரும் வேளையில், ''ராஜாவின் சங்கீத திருநாள்'' நிகழ்ச்சி மூலமாக மதுரை மக்கள் இசை மழையால் நனைய போகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.