பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மதுரையில் நடக்கும் இளைய ராஜாவின் இசை நிகழ்ச்சியை காண ரசிகர்களிடையே போட்டி நிலவுகிறது. நேற்று, ரசிகர் ஒருவர் ரூ.2.50 லட்சம் கொடுத்து இளையராஜா கையால் டிக்கெட் பெற்றுச் சென்றார்.
மதுரை தமுக்கம் மைதானத் தில் ஏப்.,5 மாலை 6.30 மணிக்கு இசையமைப்பாளர் இளையராஜாவின் "ராஜாவின் சங்கீதத் திருநாள் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை நடந்து வரும் நிலையில், ரூ.1 லட்சத்திற்கு மேல் டிக்கெட் வாங்குபவர்கள் இளையராஜாவிடம் நேரடியாக பெற ஏற்பாடு செய்யப்பட்டது. அறிவிப்பு வந்ததுமே மதுரை ரசிகர் ஒருவர் ரூ.2.50 லட்சம் கொடுத்து இளையராஜாவிடம் "டிக்கெட் பெற்று சென்றார்.
இது குறித்து, இளையராஜாவிடம் கேட்ட போது, ""மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் தலைமையில் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இரு "கீ போர்டுகள், சிறிய இசைக்கலைஞர்களை கொண்டு நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளை இதுவரை பார்த்திருக்கலாம். மதுரையில் நடக்கும் இசை நிகழ்ச்சி அதற்கு மாறுபட்டது, பிரமாண்டமானது. சென்னைவாசிகள் கூட இது போன்ற நிகழ்ச்சியை ரசித்திருக்க முடியாத அ ளவிற்கு அபூர்வமாக இருக்கும். இந்த அரிய சந்தர்ப்பத்தை, மதுரை மக்கள் தவறவிட வேண்டாம். மதுரை மக்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். பெரிய தொகை கொடுத்து என் கையால் "டிக்கெட் வாங்கிச் செல்லும் அளவிற்கு ரசிகர்களும் ஆர்வம் காட்டுகின்றனர், என்றார்.