ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் ஆகிய படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். மேற்கண்ட படங்களைத் தயாரித்தவகையில் தமிழ்சினிமாவின் ரசனை மிக்க தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றிருந்தார் சி.வி.குமார். இவர் தேர்ந்தெடுத்த கதைகள் வித்தியாசமாக இருந்தன. அதனால் இவர் தயாரித்த படங்கள் வெற்றியும் பெற்றன. அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் என ஹாட்ரிக் வெற்றிக் கொடுத்ததின் காரணமாக இவரது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் படநிறுவனம் பேனர் வேல்யூ உள்ள நிறுவனமாக படத்துறையில் உருவெடுத்தது.
அதனால்தான், ஏ.ஆர்.முருகதாஸ் உடன் கூட்டணியை முறித்துக் கொண்ட ஃபாக்ஸ் ஸ்டார் படநிறுவனம், சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் உடன் கூட்டணி அமைத்து படங்களைத் தயாரிக்க ஒப்பந்தம் போட்டது. இத்தனை பெருமைக்கும் வணிகத்துக்காக சமரசம் செய்து கொள்ளாமல் வித்தியாசமான கதைகளை சி.வி.குமார் தேர்ந்தெடுத்ததுதான் காரணம்.
சி.வி.குமாரின் சமீபத்திய நடவடிக்கைகளைப் பார்த்தால் இந்தப் பெருமையை இவர் மெல்ல மெல்ல இழக்க ஆரம்பித்துவிட்டார் என்றே தோன்றுகிறது. அதிகமாக சம்பாதிக்கும் ஆசையோ என்னவோ...கமர்ஷியல் டைரக்டர்களை வைத்து மசாலாப்படங்களைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். அண்மையில் விக்ரமை வைத்து படம் தயாரிக்க எண்ணிய சி.வி.குமார், அவரிடம் பேசியிருக்கிறார். விக்ரம் கால்ஷீட் தர ஒப்புக்கொண்டுவிட்டாராம்.