‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகம் காட்டி வருபவர் கமல். அதோடு கவிதை எழுதுவதிலும் வல்லவர். அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது தனக்கு தோன்றும் சிந்தனைகளை எழுதி பாதுகாத்து வைப்பார். அவற்றை சில நேரங்களில் தனது படங்களில் பாடல் வடிவத்துக்கு மாற்றுவதும் உண்டு.
ஆனால், அப்படி படங்களுக்கு பொருந்தாத கவிதைகளை கடந்த சில வருடங்களாகவே பாதுகாத்து வைத்திருக்கும் கமல், அவற்றை விரைவில் ஒரு கவிதை தொகுப்பாக வெளியிட திட்டமிட்டுள்ளாராம். தான் எழுதியதில் இருந்து சிறந்த கவிதை என்று தனக்கும் தோன்றிய 100 கவிதைகளை தேர்வு செய்திருக்கும் கமல், விரைவில் அவற்றை ரசிகர்களுக்கு அர்ப்பணிக்க போகிறாராம்.
தற்போது விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் பட வேலைகள் துரிதமாக நடைபெற்று வருவதால், கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் தருணத்தில் தனது கவிதை தொகுப்பினை வெளியிடப்போகிறாராம். அந்த விழாவில் சினிமாக்காரர்களுக்கு இடமில்லையாம். தமிழகத்தில் உள்ள முக்கிய இலக்கியவாதிகள், எழுத்தாளர்களை மட்டுமே அந்த விழாவுக்கு அழைக்கப்போகிறாராம்.