'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வடிவேலு நடித்துள்ள தெனாலிராமன் படத்தில் கவர்ச்சி தேவதையாக நடித்திருக்கிறார் மீனாட்சி தீட்ஷித். இந்த படத்தில் இவர் நடிப்பதற்கு முன்பு பல நடிகைகளை ஒப்பந்தம் செய்தனர். ஆனால், வடிவேலுவுடன் நடிக்கிறீர்கள்? அப்படியென்றால் இந்த படத்தோடு உங்கள் ஆட்டம் க்ளோஸ் என்று அவர்களை கோடம்பாக்கத்தில் உள்ள சிலர் மிரட்டியே ஓட வைத்தனர்.
இந்தநிலையில், கடைசியாக வந்தவர்தான் மீனாட்சி தீட்ஷித். இவரிடமும் அதேபோல் மிரட்டல்கள் சென்றன. ஆனால், இவர் அதை எதையும் சட்டை செய்யவில்லை. காமெடியனோ, கதாநாயகனோ யாராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு பர்பாமென்ஸ் பண்ண முக்கியத்துவம் இருக்கும்பட்சத்தில் அந்த வாய்ப்பை நழுவ விட மாட்டேன் என்று துணிச்சலாக வடிவேலுவுடன் நடிக்க தயாரானார்.
இதுபற்றி மீனாட்சி தீட்ஷித் மேலும் கூறுகையில், வடிவேலுவுடன் நான் நடிக்க கமிட்டானபோது, தமிழில் நடிக்கிற முதல் படத்திலேயே வடிவேலுவுடன் தான் நடிக்க வேண்டுமா? வேறு நடிகர் கிடைக்கவில்லையா? இவருடன் நடித்தால் அடுத்து எந்த ஹீரோக்களும் சான்ஸ் தரமாட்டார்கள் என்றெல்லாம் என்னை சிலர் பயமுறுத்தினர்.
ஆனால் நான் எதையும் செவிகொடுதுது கேட்காமல் வடிவேலுவுடன் நடிக்கத் தொடங்கினேன், அப்போது அவரது நடிப்பைக்கண்டு வியந்தேன். என்னைக்கேட்டால் அவர் ஒரு காமெடி சுனாமி, அந்த அளவுக்கு சூப்பராக நடித்தார். அதோடு எனக்குள் இருந்த காமெடி நடிப்பையும வெளியே கொண்டு வந்தார். ஆக இந்த படத்திற்கு பிறகு எனக்கு தமிழில் நிறைய படங்கள் கிடைக்கப்போவது உறுதி என்கிறார் மீனாட்சி தீட்ஷித்.