ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜீத்தின் அடுத்த படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார், சூர்யா மூவீஸ் சார்பில் ஏ.எம்.ரத்தினம் தயாரிக்கிறார். அனுஷ்கா ஹீரோயின். இந்த மாதம் 10ந் தேதி முதல் படப்பிடிப்புகள் தொடங்குகிறது. இந்தப் படக் கதையின் வில்லன் கேரக்டர் பவர்புல்லானதாம். அதனால் வில்லன் கேரக்டரிலும் அஜீத்தையே நடிக்க வைக்க கவுதம் மேனன் விரும்பினார். அதற்கு அஜீத் ஒப்புக் கொள்ளவில்லை. ஒரே படத்தில் நல்லவன் கெட்டவன் வேண்டாம். ஏதாவது ஒன்றை செய்கிறேன் என்று கூறிவிட்டாராம். இதனால் தீவிரமாக யோசித்த கவுதம் மேனன் அரவிந்த்சாமியை வில்லனாக்கி விட்டார்.
இதில் இன்னொரு செய்தியும் உண்டு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரவிந்த்சாமியை சந்தித்த கவுதம்மேனன் "அடுத்து நான் ஒரு பெரிய ஹீரோவுக்கு ஆக்ஷன் படம் பண்ணப்போகிறேன். அதில் நீங்கள்தான் வில்லன், பாடியை பில்டப் பண்ணுங்க முடிஞ்சா சிக்ஸ் பேக் கொண்டு வாங்க" என்றாராம். அதன் பிறகு ஜிம்மில் தவமிருந்து அரவிந்த்சாமி பாடி பில்டர் ரேன்ஞ்சுக்கு ஆகிவிட்டார். அஜீத்துக்கு சொல்லப்பட்ட கதையில் இரண்டு வில்லன்கள். ஒன்றை அஜீத் செய்ய மற்றொரு வில்லனை அரவிந்த் சாமி நடிக்கத்தான் கவுதம் திட்டமிட்டிருந்தார். இப்போது அஜீத் நடிக்க வேண்டிய வில்லன் கேரக்டரை அரவிந்த் சாமிக்கு கொடுத்துவிட்டு. அரவிந்த்சாமி நடிப்பதாக இருந்த வில்லன் கேரக்டருக்கு ஆள் தேடிக் கொண்டிருக்கிறார் கவுதம் மேனன்.