ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குனதில்லண்ணே. என்னோட அதிர்ஷ்டம் நான் இப்ப ஓரளவு நல்லா சம்பாரிச்சிட்டு இருக்கேன். இருந்தாலும் படிக்கலேங்கிற வருத்தம் என் மனசுல இருக்குண்ணே. என்னய மாதிரி பணம், காசு இல்லங்கிற காரணத்துக்காக படிக்காம இருந்துறக் கூடாதுண்ணே... என்று அடிக்கடி சொல்லும் காமெடி நடிகர் கஞ்சா கருப்புக்கு சொந்தமாக பள்ளிக்கூடம் கட்டி, இலவசமாக கல்விச்சேவையாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.
சமீபத்தில் சங்கீதா என்ற பிஸியோதெரபிஸ்ட்டை கரம்பிடித்த கஞ்சா தனது லட்சியத்தில் உறுதியாக இருக்கிறாராம். பிசியோதெரபி தேர்வு எழுதியிருக்கும் சங்கீதா, தேர்ச்சி பெற்றதும், சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் வேலைக்கு சேரப்போகிறார். வாங்கும் சம்பளத்தில் பாதியை தன் மாமனார் - மாமியாருக்கு தர வேண்டும் என்று கூறியிருக்கிறாராம் கஞ்சா கருப்பு. மீதமுள்ள தொகையை வைத்து, படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதுபற்றி கஞ்சாவிடம் கேட்டால், அந்த புள்ளய படிக்க வெச்சது அவுங்க அப்பா - அம்மாதானேண்ணே.... அதான் சம்பளத்துல பாதியை அவுங்களுக்கு கொடுக்கணும்னு சொல்லியிருக்கேன். மீதி பணத்த கஷ்டப்படுற பசங்களுக்கு உதவுறதுக்கு பயன்படுத்தணும்னு ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு பண்ணிருக்கோம்ணே... என்கிறார் மனிதாபிமானத்துடன்!