இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருப்பதால், சில கட்சிகள் சார்பில் நடிகர்-நடிகைகளும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அந்த வகையில், அதிமுக சர்பில் ராமராஜன், செந்தில், சிங்கமுத்து, குண்டுகல்யாணம், வையாபுரி உள்பட பல நடிகர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். இவர்களில் செந்தில் குறிப்பிடத்தக்கவர்.
காரணம், அன்று முதல் இன்றுவரை அதிமுகவிலேயே இருக்கிறார். அந்த கட்சிக்காக ஒவ்வொரு தேர்தலின்போதும் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டும் அதிமுகவுக்காக மக்களை சந்தித்து வரும் செந்தில், அவர்களை கவர வேண்டும் என்பதற்காக, சினிமாவில் தான் நடித்த சில காமெடி காட்சிகளையும் கோர்த்து பேசி வருகிறார்.
அதில் ராஜகுமாரன் படத்தில் கவுண்டமணியும், செந்திலும் கருப்பாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்யாமல் இருவரும் தெறித்து ஓடுவார்கள். அதை இப்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேராமல் அனைத்து கட்சிகளும் ஓடுவதை ஒப்பிட்டு பேசி வருகிறார். இப்படி சினிமாவில் தான் நடித்த சில காமெடி காட்சிகளை தற்போதைய அரசியலுடன் கலந்து அவர் பேசி வருவதால், அவரது பேச்சைக்கேட்டு மக்கள் கைதட்டி ஆரவாரம செய்கிறார்களாம்.