டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பூ படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் எஸ்.எஸ்.குமரன், அதன் பிறகு களவாணி படத்துக்கு இசை அமைத்தார். பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் ஒளிப்பதிவாளர் பயிற்சி பெற்ற எஸ்.எஸ்.குமரனுக்கு படம் இயக்க வேண்டும் என்பது லட்சியம். அதனால் நண்பர்கள் உதவியுடன் சொந்தமாக தேனீர் விடுதி என்ற படத்தை எடுத்தார். படம் தோல்வி அடைந்தது. இதனால் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இழந்த பணத்தை அடுத்த படத்தில் எடுத்து விட வேண்டும் என்று மீண்டும் கேரள நாட்டிளம் பெண்களுடனே என்ற படத்தை சொந்தமாக தயாரித்து இயக்கினார். இதற்கும் நண்பர்கள் உதவி செய்தார்கள்.
மலையாள பெண்ணை காதலித்து அதில் தோற்றுப்போன ஒரு தந்தை தன் மகனுக்காவது மலையாள பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக மகனை மலையாள வாசனையோடு வளர்த்து அவனை பெண்பார்த்து வர கேரளாவுக்கு அனுப்புகிறார். அங்கு செல்லும் மகன் கேரள பெண்ணை திருமணம் செய்து திரும்பினானா? என்பதுதான் படத்தின் கதை.
ஆனால் இயக்குனர் எஸ்.எஸ்.குமரனுக்கு வந்தது படத்தின் டைட்டில் வழியாக பிரச்னை. படம் ரிலீசுக்காக சென்னையில் உள்ள மால் தியேட்டர்களை அவர் அணுகியபோது "அய்யோ இது பரங்கிமலை ஜோதியில ஓடுற படமாச்சே எங்க தியேட்டர் இமேஜ் கெட்டுவிடும்"ன்னு அலறி அடிச்சு படத்தை திரையிட மறுத்து இருக்கிறார்கள். இல்லீங்க இது பேமிலி எண்டர்டெயிண்மெண்ட் என்று விளக்கம் சொல்லி, படத்தில் முழு பாடல்களையும் எழுதியுள்ள வைரமுத்து சிபாரிசு செய்து ஒரு சில தியேட்டர்களில் திரையிட்டார்கள்.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 150 தியேட்டர்களில் படம் ரிலீசாகி இப்போது இரண்டாவது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் இணைய தளங்களிலும், வெளியிலும். இந்தப் படம் ஆபாச படம், கேரள பெண்களை பற்றியும், கேரள மாநிலத்தை பற்றியும் அவதூறு பரப்பும் படம் என்ற செய்திகள் வந்து கொண்டிருப்பதால் செய்வதறியாது திகைத்து நின்று கொண்டிருக்கிறார் எஸ்.எஸ்.குமரன்.
கண்களில் நீர் ததும்ப அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: இரண்டு வருடம் கஷ்டப்பட்டு இந்தப் படத்தை முடிச்சேன். கேரளா முழுவதும் அலைஞ்சு லொக்கேஷன் பிடிச்சு படமாக்கி இருக்கேன். கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள பாசப்பிணைப்பை படமாக்கி இருக்கேன். படத்தை பார்த்துவிட்டு கேரள தணிக்கை குழு யு சான்றிதழ் கொடுத்திருப்பதோடு என்னை பாராட்டியது. கேரளா.காம் என்ற டைட்டிலோடு அங்கு ரிலீசாக இருக்கிறது. "சிந்து நதியின் மிசை நிலவினிலே..." என தொடங்கும் மகாகவி பாரதியாரின் பாடலில் வரும் "கேரள நல்நாட்டிளம் பெண்களுடனே..." என்ற வரியைத்தான் படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறேன். பாரதியாரின் பாடல் வரிகளையே ஆபாசமாக பார்க்கும் ஒரு சமூகத்தில் வாழ்வது நினைத்து வெட்கமாக இருக்கிறது.
படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடித்திருக்கிறார். தொப்புள் தெரியகூட சேலை அணிந்து நடிக்கவில்லை. தணிக்கை குழு யு சான்றிதழ் கொடுத்திருக்கிறது. தமிழக அரசு வரிவிலக்கு கொடுத்திருக்கிறது. அப்படி இருந்தும் படத்தை பார்க்காமலேயே படத்தை பற்றி பல தவறான விஷயங்களை பரப்புகிறார்கள். இவர்கள் யார், இவர்களுக்கு நான் என்ன துரோகம் செய்தேன் என்றுதான் தெரியவில்லை" என கலங்குகிறார் எஸ்.எஸ்.குமரன்.