ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குழந்தைகள் விஷயத்தில் நான் மிகவும் கண்டிப்புடன் இருப்பேன் என்கிறார் பாலிவுட் நடிகை கஜோல். வயிற்று போக்கு நோயை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நடிகை கஜோல் பிரசாரம் செய்த வருகிறார். குழந்தைகளுக்கு அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை தனது பிரசாரத்தின் முக்கிய அம்சமாக கஜோல் கொண்டுள்ளார். அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை தான் பின்பற்றி வரும் கஜோல், தனது குழந்தைகளுக்கும் அதனை கண்டிப்புடன் பின்பற்றுகிறார்.
நான் மிகவும் கண்டிப்பானவள். நல்ல ஒழுக்கங்களை கற்றுக் கொடுப்பதில் நான் மிகவும் கண்டிப்புடன் இருப்பதாக எனது மகள் கூறுகிறாள். கை கழுவும் பழக்கத்தை நான் கண்டிப்புடன் கடைபிடிப்பதால், கண்டிப்புடன் அவர்களுக்கும் பழக்குவதாக நான் அவளிடம் கூறுகிறேன். உங்களுக்கு நல்ல விஷயங்கள் தெரியாது. அதனால் நான் கற்றுக் கொடுக்கிறேன் என்றும் சொல்கிறேன். வாழ்க்கைக்கு அது மிகவும் முக்கியம் என நான் கருதுகிறேன்; குழந்தைகளுக்கு நாம் தான் நல்ல விஷயங்களை கற்றுத் தர வேண்டும். எனது குழந்தைகள் மிகவும் நம்பிக்கையானவர்கள். என் மகளுக்கு என்னை விட எனது கணவரை மிகவும் பிடிக்கும். சில நேரங்களில் என்னை பிடிக்கும். எனது மகன் மிகவும் சின்ன பையன். அதனால் அவனுக்கு யாரை பிடிக்கும் என சரியாக கணிக்க முடியவில்லை.
நான் குழந்தை போன்றவள். ஆனால் என் அம்மாவுடன் இருக்கும் போது தேவதையாக உணர்ந்தேன்; எனது அம்மா தான் எனக்கு எது நல்லது, எது கெட்டது என கற்றுக் கொடுத்தார். அதை போல் நானும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கஜோல் இதனை கூறினார்.