பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மைனா அமலாபால் தலைவாவில் விஜய்யுடன் டூயட் பாடியதில் இருந்தே அவரது ரேஞ்ச் எகிறி விட்டது. படம் ஓடியதோ இல்லையோ ஸ்டார் நடிகையாகி விட்டார். அதைத் தொடர்ந்து நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி படங்களில் நடித்து வந்தார். இதில் ஜெயம்ரவியுடன் நடித்த நிமிர்ந்து நில் தமிழை விட தெலுங்கில் மெகா ஹிட் படமாகி உள்ளது. அதனால் அதையடுத்து தெலுங்கில் உடனடியாக அவருக்கு ஒரு படம் புக்காகியுள்ளது.
தெலுங்கு நடிகர் ஹவீஸ் நடிக்கும் அப்படம் வாஸ்தானி வேணுகா என்ற பெயரில் தயாராகிறதாம். தாசரி கிரண்குமார் என்பவர் தயாரிக்கும் அப்படத்துக்கு அமலாபாலை புக் பண்ணும்போது இவர் கேட்காமலேயே ஒரு கோடி சம்பளம் தருவதாக முன்மொழிந்து விட்டார்களாம். இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த அமலாபாலின் காதில் அவர்கள் சொன்ன கதை விழவில்லையாம். ஒரு கோடி என்ற வார்த்தைதான் மீண்டும் மீண்டும் ரிப்பீட்டாகிக்கொண்டேயிருந்திருக்கிறது.
அதனால், மறுபேச்சின்றி எந்த தேதியில் கால்சீட் வேண்டும் என்றுகூட கேட்காமல், எப்போது கேட்டாலும் கால்சீட் தருகிறேன் என்று சொல்லி அக்ரிமென்டில் சைன் பண்ணி விட்டாராம். அதையடுத்து,இப்போது கோலிவுட்டுக்கு வந்த பிறகும் அந்த ஒரு கோடி பல்லவியையே பாடிக்கொண்டிருக்கிறார் அமலாபால். இதனால் அவரை புக் பண்ணயிருந்த சில படாதிபதிகள் மிரண்டு நிற்கின்றனர்.