நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பாலுமகேந்திரா இயக்கிய மூடுபனி படத்தில் தமிழில் அறிமுகமானவர் பானுசந்தர். தெலுங்கு நடிகரான இவர் அதையடுத்து சில்க் சில்க் சில்க், நீங்கள் கேட்டவை, வீடு, திமிரு, மிருகம் என பல படங்களில் நடித்தார். தற்போது ஏதோ செய்தாய் என்னை, எட்டுத்திக்கும் மதயானை உள்பட சில படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதில் ராட்டினம் படத்தை இயக்கிய கே.எஸ்.தங்கசாமி இயக்கத்தில் நடித்து வரும் எட்டுத்திக்கும் மதயானை படத்தில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கேரக்டரில் நடிக்கிறார் பானுசந்தர். கதைப்படி அவரது கேரக்டர், பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது ஹேல்மெட்டோடு அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவார்களாம்.
ஆனால் இந்த காட்சியில் நடிக்க தன்னால் முடியாது என்று சொன்ன பானுசந்தர், அதற்கு டூப் வைத்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம். ஆனால், அவரது பாடி லாங்குவேஜைப்போன்று டூப் நடிகரே கிடைக்கவில்லையாம். அதனால், வேறு வழியில்லாமல் நீங்கள்தான் நடித்தாக வேண்டும் என்று அவரை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார்களாம்.
அதையடுத்து, கழுத்தை அறுத்து எடுப்பது போன்ற காட்சியில் என்னையே நடிக்க வைத்து விட்டீர்களே. என் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது என்று பீல் பண்ணிக்கொண்டிருந்தாராம் பானுசந்தர்.